அத்தியாயம்
– 16
நீங்க
கிளம்புங்க மது, “ நான் சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு போய் தூங்குகிறேன்”.
எனக்கு பிரச்சினை
இல்ல போங்க…குட்டி
பையன் எழுந்தால் சிரமமா இருக்கும். “
அதெல்லாம் ஒன்னும் கிடையாது சார்”! நீங்க சாப்பிடுங்க! அவன் நல்லா தூங்கிட்டான்
எழுந்துக்க எப்படியும் இரண்டு மணிநேரம் மேல் ஆகும்…
“நான் உட்கார்ந்து இருக்கேன் “.இன்னும்
தோசை வேணும்னா யோசிக்கமா கேளுங்க சுட்டு தரேன். பொறுமையா சாப்பிடுங்க .
மதுவின் , “ஒவ்வொரு கனிவான வார்த்தைகளும் தீனாவின் மனதை ஏதோ செய்தது “ பிறகு எதுவும் பேசாமல் ஒவ்வொரு வாயாக பிட்டு வைத்து
சாப்பிட ஆரம்பித்தான் .
ரொம்ப நாள் கழித்து மிகவும் பொறுமையாக
உட்கார்ந்து சாப்பிட்டது இன்றுதான் என்று சொல்லிவிட்டு கைகளை கழுவி துடைத்துக் கொண்டே முன்னே
வந்தவனிடம் ,
ஒரு
டம்ளர் நிறைய பாலை கொண்டு வந்து நீட்டினால் மது…..
பாலை பார்த்ததும் தீனாவிற்கு , “தன்னோடு தானே
இருந்தால் இவள் எப்போது சென்று போய் , பால் எப்படி கொண்டு வந்து கொடுக்கிறாள் , “எப்படி
நடந்தது ? என்று யோசனை வர,
அதையும் மது விடம் கேட்டுவிடவே நீங்கள் வரும்போது நான் சுட வைத்து
விட்டேன் இப்பொழுது வந்து உட்கார்ந்திருக்கும் போது லைட்டா சூடு பண்ணி எடுத்து
வந்து கொடுத்து இருக்கேன் .
சார்!!!
“நைட் தூங்க தானே போறீங்க? அதனால ரொம்ப சூடா
குடிச்சா நல்லா இருக்காது , மிதமான
சூட்டுல தான் இருக்கு குடிங்க!
தன்னையும் கவனிக்கும் மதுவின் மீது ஏதோ
ஒரு விதமான பிடிப்பு ஏற்படுவதை, தீனாவால் உணர முடிந்தது…
பாலை தீனா குடித்து
முடித்த பின், எல்லாம் குடித்தாரா?
என ஒருமுறை பார்த்தவிட்டு டம்ளரை எடுத்துக்
கொண்டு கிச்சனிற்கு சென்றுவிட்டாள்”.
கிச்சனில் மற்ற சாமான்களை எல்லாம்
ஒதுக்கி வைத்துவிட்டு வெளியே வர,
அப்பொழுதும் மது செய்த செயலை பார்த்து உதடுகள் விரிய சிரித்துவிட்டு, மதுவே தான், “ விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே நின்று இருக்க”,
சார்!!! மணிய பாருங்க!! ,”
சீக்கிரம் போய் தூங்குங்க… நாளைக்கு டியூட்டிக்கு
போகனும் இல்லையா”???
ஆமா! நானே மறந்துட்டேன் சொல்றதுக்கு நாளைக்கு
சீக்கிரமா எந்திரிச்சு கிளம்பனும்
மார்னிங் எனக்கு புட்
வேண்டாம். நான் வெளியில் பார்த்துக்கொள்கிறேன்..
. சரிங்க ! மது!! “குட் நைட்” …
“குட் நைட் சார் “என்க மதுவை பார்த்து தீனா முறைக்க…
என்னாச்சு? எதுக்கு இப்போ கோவப்படுறார்
.நம்ம என்ன தப்பா பேசினோம் என யோசிக்க ,
நீங்க எப்போ தான் என்ன பேர் சொல்லி கூப்புடுவிங்கனு
பார்க்கிறேன்”மது
சார் !!அது வந்து முயற்சி பண்றேன்…என்று இருவரும் மாடி படிவரை பேசிக் கொண்டே அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர் …
படுத்த உடனே
இருவருக்கும் தூக்கம் எட்டா கனிதான்.
“சிறிது நேரம் மதுவும், தீனாவை நினைத்து பார்த்துக் கொண்டிருக்க”…
இங்கு தீனாவிற்கும் அதே நிலைமைதான், , “ மதுவின் புகைப்படத்தை உற்றுநோக்கி கொண்டே படுத்துக்கொண்டே இருக்க “, சிறிது நேரத்தில்
களைப்பில் அப்படியே கண் அயர்ந்து விட்டான்…
__________————-______
ஆதவன் யாருக்கும் காத்திராமல் தன் பொன் கதிர்களால் அனைவருக்கும்
அணைப்பை தர எழுந்து விட….
இன்றைய நாளை நினைத்து கொண்டே என்ன ?
என்ன? வேளை என மனதில் ஒருமுறை கணக்கிட்டபடி குறித்து கொண்டு தயாராகி கீழே வர…
கிச்சனில் யாரோ நின்று கொண்டிருக்க
கண்ணம்மாவாகா இருக்குமோ??? என்னவென்று எட்டி பார்க்க மது பால் காயவைத்தபடியே
முடியை அள்ளி கொண்டை இட்டு கொண்டிருந்தாள்….
காலையில்
யாரும் வரமாட்டார்கள் என நினைத்தாலோ !!
என்னவோ? தூங்கி எழுந்த நிலையிலே நின்று இருக்க,
யாரோ? என வந்து பார்த்த
தீனாவிற்கு மதுவின் “சிறுது விலகிய சேலையில் தெரிந்த மேடுகளை
, வளைவுகளையும் கண்டு
மனம்தடுமாற திரும்பி நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவள் அறியாமல் கிளம்ப எத்தனிக்க…
வெளியை வந்து பார்த்தவளுக்கு
, “ தலையில் கைவைத்த
படி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த தீனாவை பார்த்து ஒருநிமிடம் “பக்” என இருக்க பயந்தேவிட்டாள்….
தன்னை உடனே
சரி படுத்திக்கொண்டு,,,,,
வாங்க சார் !!!! “குட்டி பையன் எந்திரிச்சிட்டா, பாட்டில்ல இருந்த பால் கொடுத்துட்டேன்
, மறுபடியும் எழுந்தா
குடுக்க பால் இல்ல.அதுதான் ஆத்திக்கொண்டு போலாம்னு வந்தேன்…
ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க,” உங்களுக்கும் சுட! சுட ! டீ
போட்டு தரேன் நீங்களும் குடிச்சுட்டு கிளம்புவீங்களாம்”.
எனக்கு ஆல்ரெடி டைம் ஆயிடுச்சு, நீங்க பாருங்க என்று “எங்கோ பார்த்த மாதிரி தீனா சொல்ல,
“ ரெண்டு நிமிஷம் பொறுங்க “,சார்.
உங்களுக்கு
சூடா டீ கலந்து தரேன். அப்படியே நானும் குடிச்ச மாதிரி
இருக்கும் தனியா நின்னு குடிக்கிறதுக்கு எதோ மாதிரி இருக்கு…
மதுவின் இந்த இயல்பான பேச்சு தீனாவிற்கு புதிது… காலையில் இவளின் பேச்சு தனக்கு புத்துணர்ச்சி
தருகிறதே….
அளந்து பேசும் மது
இப்பொழுதெல்லாம் கொஞ்சம்பேசஆரம்பித்திருக்கிறாள்…
மதுவை இன்னும் அதிகமாக தீனா ரசிக்க
ஆரம்பித்தான்….அவனிற்கே
“ தன்னில் ஏற்படும்
மாற்றங்கள் புரிந்தாலும் அதை தான் இருக்கும் நிலையில், மதுவிற்கு தான் எந்த வகையிலும் தகுதி
கிடையாது”தன்மனதின் எண்ணத்தை உள்ளுக்குள்ளேயே புதைக்க வேண்டும்
என முடிவு எடுத்துக்கொண்டான்….
தீனாவிற்கு
டீயை போட்டு கொடுத்து விட அவனும் குடித்துவிட்டு
, “ரொம்ப
நன்றாக இருக்கிறது, தேங்க்யூ!!!…மது
நிஜமா நல்லா இருக்கா சார்…
நிஜமா நல்லா
இருக்கு மது இஞ்சி டீக்கு நான் அடிமை…காலையில கிடைச்சது என் பாக்கியம்…
சரி! சரி! போதும் சார்!, “ நேரம் ஆகலையா உங்களுக்கு “?
அச்சோ!!! ஆமா போகனும்…..
மது நான் எப்படியும்
சாய்ந்தரம் வந்துருவேன் நினைக்கிறேன். நீங்க எல்லாம் பத்திரமா
இருங்க….
நான் வந்து நைட்டு சாப்பிட்டுக்குறேன் முடிந்த
அளவு நைட் டின்னருக்கு வந்துருவேன்.
.சரிங்க
சார் பார்த்து போயிட்டு வாங்க! எதுனாலும் ஒரு கால் பண்ணுங்க.
நான் கால் பண்ணலாம் மது ஆனா?? “போன் நம்பர் என்கிட்ட இல்லையே”…
சார்!!அது வந்து அம்மாவுக்கு
கூப்பிடுங்கன்னு சொன்னேன்…. தீனா தன்னிடம் விளையாட்டாக பேச
ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்ததும் அவன் தன்னை கேலி தான் செய்கிறான் என்று
புரிந்ததும் ,
மதுவும்
சிரித்துவிட்டு ,”பொய் சொல்லாதிங்க எப்படியு நான் இங்க வேலைக்கு சேரும்போதே என்னோட எல்லா விவரங்களையும்
சேகரிச்சு இருப்பிங்க”, உங்ககிட்ட என் நம்பர் இல்லைனு பொய் சொல்லாதிங்க”….
பரவாயில்ல
மது புத்திசாலிதான் நீங்க..
என்ன சார்,” வஞ்சபுகழ்ச்சியா “
எதுவும்
பேசாமல் தீனா மதுவை பார்க்க, “இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்து விட்டனர் “.
பின்பு மதுவிடம் விடைபெற்று , சரி மது நான் கிளம்புறேன் டைம் ஆயிடுச்சு பத்திரமா இருங்க பாய்…
நீங்களும் பத்திரமா இருங்க சார்…பாய்…என கதவிற்கு அருகே நின்று கை
அசைக்க ,
மனதிற்கு மனதிற்கு , “மதுவின் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சி தருவதை நினைத்து மனம் லேசாக”…
இருவரும்
புன்னகை முகமாக விடைபெற தீனா வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்லேசாக
மதுதீனாசென்ற திசையை பார்த்துக்கொண்டே நின்று விட்டாள்…
மனம் முழுக்க ஆசையோட வேண்டிக்கிறேன் , “உங்கள கூடிய சீக்கிரம் பழைய தீனாவா பார்க்கனும்”..தீனு
காத்திருங்கள்…..
பார்க்கலாம் அடுத்த பதிவில்…….
No comments yet.