Category: தொடர்கதை
நாவல்மேளா!!!
தொடர்கதை எழுதுங்க, பரிசை வெல்லுங்க!!!
நம் தளத்தில் நவம்பர் 15 தொடர்கதை எழுத ஆரம்பித்து மார்ச் 31 தேதிக்குள் 60 எபிசோட்கள் தாண்டி எழுதும் அனைத்து கதைகளுக்கும் பரிசும் இணைய சான்றிதழும் உண்டு.
ஒருவர் ஒரு கதை மட்டுமே எழுதலாம். காதல், குடும்பம், ஆன்டி ஹீரோ கேட்டகரியில் எழுதலாம்.
கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். கதையின் காப்புரிமை உங்களுடையதாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே வேறு தளத்தில் எழுதிய கதையை போட்டியில் பதிவிடலாம்..
மோசமான எழுத்து நடை, அதிக எழுத்து பிழை போன்றவற்றை தவிர்க்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
உங்கள் கதையை குறைந்தபட்சம் 500 வாசகர்களாவது தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
(அதாவது முதல் எபிசோடில் ஆரம்பித்து 60 episodes வரை ஒவ்வொரு எபிசோடையும் குறைந்தபட்சம் 500 வாசகர்களாவது படிக்க வேண்டும்)
ஒரு நாளில் இரண்டு எபிசோட் வரை மட்டுமே பதிப்பிக்க வேண்டும். அதற்கு மேல் கூடாது. இதை பாலோ செய்தால் போட்டியில் கலந்து கொள்ளும் 50 எழுத்தாளர்களுக்கும் பரிசு நிச்சயம்.
அவ்வளவு தான் ! பிறகு என்ன எழுத்தாளர் பெருமக்களே!!
பரிசு உங்களுக்கு தான்.. எழுத ஆரம்பியுங்கள்...
*இந்த போட்டியில் முதலில் பங்கேற்கும் 50 எழுத்தாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதனால் விரைவில் போட்டியில் கலந்து கொண்டு அந்த 50 எழுத்தாளர்களுள் ஒருவராக மாறுங்கள்..
போட்டி ஆரம்பிக்கும் தேதி - 15 நவம்பர் 2025
போட்டி முடிவடையும் தேதி - 31 மார்ச் 2026
(முன்னெச்சரிக்கை - போட்டியில் நீங்கள் கதை பதிவிட்ட பிறகு edit அல்லது டெலிட் செய்ய முடியாது, அதனால் பதிவிடும் போதே சரியாக தலைப்பு, கதையை பதிவிடுங்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் editor@valanchuli.com மெயிலுக்கு contact செய்யுங்கள். எங்கள் குழுவினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். போட்டி முடிவுகள் அறிவித்த பிறகு நீங்கள் விரும்பினால் உங்கள் கதையை தளத்தில் இருந்து நீக்கி விடுவோம்)
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
**நாவல்மேளா போட்டி முடிவுகள் **
நாவல்மேளா போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகள். போட்டியின் விதிமுறைகள்படி, போட்டியின் இறுதி நாளுக்குள் 60 எபிசோட் பதிவிட்டிருக்க வேண்டும், கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும், ஒவ்வொரு எபிசோடையும் குறைந்தபட்சம் 500 வாசகர்கள் படித்திருக்க வேண்டும், இதை பின்பற்றும் அனைத்து கதைகளுக்கும் பரிசு என்று அறிவித்திருந்தோம். இந்த விதிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
நாவல்மேளா போட்டியில் வெற்றி பெற்ற கதைகளுக்கான பரிசுத்தொகை :-
ரூபாய் ஐந்தாயிரம் & இணைய சான்றிதழ்
போட்டியில் பங்கேற்று போட்டி இறுதி தேதிக்குள் 60 எபிசோட் பதிவிட்டிருந்த அனைத்து கதைகளுக்கும் இணைய சான்றிதழ் வழங்கப்படும்.
நாவல்மேளா போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற கதை :-
'தித்திக்கும் காதல் தீயே - எழுத்தாளர் செல்லம்மாள் பாரதி'
இணைய சான்றிதழ் வழங்கப்படும் கதைகள் :-
'அந்தி நேரத்து அல்லிராணி - எழுத்தாளர் ஶ்ரீ துர்க்கா'
'கல்யாணம் முதல் காதல் வரை - எழுத்தாளர் Shanmuha sethuramachandran'
அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாவல்மேளா போட்டியில் கலந்து கொள்ள முடியாத எழுத்தாளர்களே கவலை வேண்டாம், கூடிய விரைவில் அடுத்த நாவல் போட்டி அறிவிப்பு வெளிவரும். காத்திருங்கள்!!!
*பரிசு பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். மே 10 தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கு விவரத்தை admin@valanchuli.com மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.*
No comments yet.