நெகிழா நெகிழி
பனியை சுமக்க
வேண்டிய
மார்கழிப் பூக்கள்
மழைநீரில் பிறந்து
மலர்ந்து
வாசம் திரிந்து
தேனை
மழை நீரில்
கலந்து
தெருவெல்லாம்
கோலங்கள்
இட்டு
சாலையின்
ஓரம்
ஓடையின்
சாயலில்
ஓடி களைத்து
கேரி பேக்
தடுப்பணைகளால்
சில நேரம்
தேங்கி
அங்கேயே
கொஞ்சம்
தூங்கி
அளவில்
அதிகமானதால்
ஆத்திரத்தில்
பொங்கி
தடுப்பணைகளை
தலையில்
தாங்கி
சடசடவென
கொட்டும்
மழையென
பாயும்
வாய்க்கால்களில்
கலந்து
மிதக்கும்
நெகிழி குப்பையோடு
புரண்டு
சந்து பொந்துகளில்
நெகிழி
நெகிழாமல்
அடைத்து
தாழ்ந்த
வீடுகள்
கடைகள்
குடிசைகள்
அலுவலகங்கள்
முடிந்தால்
அடுக்கு மாடிக்
குடியிருப்புகள்
எல்லாம்
அலைந்து
மலையின்
சரிவில்
பிறந்த
மணலை
வாரி
மலைச்சரிவை
மறைத்த
குப்பை
கூளங்களை
சுருட்டி
வந்த
நதியின்
நீரோடு
சங்கமித்து
ஊரும் பேரும்
மாறி
உருண்டு திரண்டு
உவர்
நீரில்
உருவம்
இழந்து
ஆழியில்
ஐக்கியமாகி
அங்கும்
கரையாமல்
உடல்
நரையாமல்
வாழும்
நெகிழிக்கு
நன்றி.
No comments yet.