அத்தியாயம் 1

Zaara ❤️ | 20 Nov 2025 | Share

அந்த அடர்ந்த காட்டு பகுதி,அந்த காடு பாக்க அழகாக இருந்தது. அழகில் தான் ஆபத்து இருக்கும் என்பது போல அந்த காட்டின் அழகை தாண்டி அந்த இடமே மனதிற்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது அந்த காட்டின் நடுவில் ஓரு பழைய கட்டிடம் காணப்பட்டது,அந்த கட்டிடத்திற்குள் இருந்து யாரோ ஒருவரின் அலறும் சத்தம் கேட்டது.

 (வாங்க நம்மளும் உள்ள என்ன நடக்குதுன்னு பாக்கலாம் )

அங்கு ஒருவன் முகம் முழுக்க காயங்கள் உடன் எதிரில் உள்ளவனிடம் என்ன விற்று என்று மன்றடி கொண்டிருந்தான்..

அவன் எதிரில் உள்ளவனோ அப்படி ஒருவன் தன்னிடம் பேசவே இல்லை என்பது போல இல்லை போன்னை பாத்து கொண்டிருந்தான்.

 அவன் ஆரவ்….

(நீங்க நினைக்குற மாரி சார் ஒன்னும் ஹீரோ இல்லங்க ஹீரோ கூடவே எப்போவுமே இருப்பாங்களா உயிர் தோழன் அவந்தாங்க இவன் ரொம்ப பாவம்ங்கா யார் எது பண்ணாலும் நம்ம சார்க்குத்தான் அடி விழும் நீங்களே போக போக தெரிஞ்சிப்பீங்கா கதைலா)

அப்போது பாடிகாட்ஸ்களின் ஒருவன் சார் இவனை என்ன பண்ணுறது பாக்கவே பாவமா இருக்கு சார் என்று சொன்னான் அவன் சொன்னது தான் தாமதம் போன்னை பாத்து கொண்டிருந்த ஆரவிற்க்கு தூக்கி வாரி போட்டது..

ஆரவ் அந்த பாடி கார்ட்டை பார்த்து டேய் நீ சொன்னது மட்டும் அந்த டெவில்க்கு தெரிஞ்சிச்சு அவன்கூட செத்து உன்னையும் அனுப்பி வச்சிருவன் டா பேசாம மூடிட்டு நில்லு டா என்று அந்த பாடி காட்டிடம் பேசிக்கொண்டு இருக்கும் அவனின் போன் அடித்து.

ஆரவ் யார் என்று போனை எடுத்துப் பார்க்க அதில் டெவில் ♥️காலிங் என்று வந்தது அதை பார்த்த ஆரவ் மனதிற்குள் இவனை பத்தி பேசுனா மட்டும் எங்க இருந்தாலும் இவனுக்கு கேட்டிரும் போல என்று மனதிற்குள் அந்த டெவிலை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.

அதற்குள் ஆரவ் போன் கட் ஆகி விட்டது ஆரவ் ஐயோ போன் கட் ஆகிருச்சே இவன் சும்மாவே திட்டுவான் இப்போ என்ன பண்ணுறது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மறுபடியும் டெவில்லிடம் இருந்து போன் வந்தது அதை பார்த்த ஆரவ் உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

 மறுமுனையில் இருந்தவனோ அவன் கம்பீரக் குரலில் போன் எடுக்க இவளோ நேரமா என்று கேட்டான்,அதில் ஆரவ்விற்க்கு மூச்சு கூட விட முடிய வில்லை அந்த அளவுக்கு இருந்தது.

அப்போ மறுபடியும் மறுமுனையில் இருந்தவன் ஆரவ்விடம் அவனை என்ன பண்ணீங்க என்று கேட்டான்..

அதற்கு ஆரவ் நீ என்ன சொல்லுற அதுக்குத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொன்னான்.

மறு முனையில் இருந்தவன் அவனை முடிச்சிரு என்று மட்டும் சொல்லி விட்டு போன்னே கட் செய்து விட்டான்..

அவன் சொன்னதில் அதிர்ச்சியில் கட்டான ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த ஆரவ்வை பாடி காட்ஸ் ஒருவன் சார் பாஸ் இவனை என்ன பண்ண சொன்னாங்க என்று கேட்டான்.

 சோபாவில் இருந்து எழுந்தா ஆரவ் அவனை முடிச்சிருங்க என்று சொல்லி விட்டு அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியவன் அவன் கார்ரை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

 காரில் சென்று கொண்டிருந்த ஆரவ்விற்கு அவன் நினைவில் இரண்டு நாள் முன்பு சென்றது.

 இரண்டு நாள் முன்பு ஆரவ்விற்கு டெவிலிடம் இருந்து போன் வந்தது அதில் உனக்கு ஓரு போட்டோ அனுப்பிருக்கேன் அவன உடனடியா தூக்கு என்று சொல்லி விட்டுபோனை கட் செய்து விட்டான்..

 ஆரவ் அந்த போட்டோவே பார்த்தவாறு இவனை ஏன் இந்த டெவில் தூக்க சொல்லுறன் என்று யோசிச்சவாரு இருக்க அப்போது டெவிலிடம் இருந்து அவனுக்கு ஓரு மெசாஜ் வந்தது அது என்ன என்று பாக்க அதில் நீ ரொம்ப யோசிக்காத அவன் யாரு எதுக்கு தூக்க சொல்லுறான்னு..

நான் சொல்லுற மட்டும் செய் என்று இருந்தது அதை பார்த்தா ஆரவ் இவனுக்கு நான் என்ன யோசிப்பன்னு முதல் கொண்டு தெரிஞ்சி இருக்கு என்று அவன் தலையில் அவனே அடித்து கொண்டான் 🤦🏻‍♀️.

இதை எல்லாம் அவன் யோசித்தவாறு இருக்க அவன் கார் ஓரு அரண்மனை போன்ற வீட்டு முன்னாள் வந்து நின்றது, நினைப்புகளை எல்லாம் ஓரம் வைத்த ஆரவ் கார் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

 அவன் வீட்டிற்குள் வர அவன் எதிரில் ஒருவன் டேய் ஆரவ் அண்ணா ஏன்டா இவளோ நேரம் எங்கடா அண்ணா போன என்று கேட்டவாரு ஆரவ் எதிரில் வந்து நின்றான் அவன்.

அவன் ஹர்ஷித்

அவனே முறைத்து பார்த்த ஆரவ்… ஆஹன் உன் கூட பொறந்தலா ஒருத்தன் அதனால தான் டா இவளோ லேட்டா வரேன் அவன் சொன்ன வேலைய முடிச்சிட்டு வரேன் டா என்று ஹர்ஷித்திடம் சொன்னான்.

அப்போது ஹர்ஷித் டேய் அண்ணா என்று பாசமா அழைக்க அதை கேட்ட ஆரவ் மனதிற்குள் இவன் அவளோ நல்லாவன் இல்லையே இவளோ பாசமா எல்லாம் கூப்பிட மாட்டானே இப்ப கூப்பிட காரணம் என்னவா இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருக்க அப்போது ஹர்ஷித் மறுபடியும் அண்ணா என்று அழைத்தான்.

அதை கேட்ட ஆரவ் டேய் இன்னைக்கு என்ன இவளோ பாசம்… என்ன விஷயம் சொல்லு டா என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

ஹர்ஷித் சிரித்து கொண்டே அது….வந்து…. அண்ணா என்று இழுக்க..

அதை பார்த்த ஆரவ் டேய் ஒழுங்கா சொல்லு டா என்னனு என்று கேட்டான்.

அதற்கு ஹர்ஷித் உங்க ஆபீஸ்லா அனிதானு ஓரு பொண்ணு இருக்குல்ல…

ஆரவ் ஆமா ஏன் PA அதுக்கு என்ன இப்போ என்று கேட்டான்.

ஹர்ஷித் அவ நம்பர் குடுடா அண்ணா. ஆரவ் அவ நம்பர் உனக்கு எதுக்கு டா.

வேற எதுக்கு கரெக்ட் பண்ண தான் என்று சொல்ல அதற்க்கு ஆரவ் ஹர்ஷித்தை பார்த்து முறைத்த்தான்,ஹர்ஷித் இப்போ ஏண்டா அண்ணா என்ன முறைக்கிற.

 அவனை முறைத்து பார்த்த ஆரவ் என்ன பார்த்தா உனக்கு எப்படி டா தெறித்து.

நான் உனக்கு அண்ணா டா என்ன மாமா வேல பாக்க சொல்லுற என்று ஆரவ் ஹர்ஷித்தை முறைக்க…

ஹர்ஷித் சிரித்துக்கொண்டே கூல் ப்ரோ என்று ஆரவ் மேல கை போடா ஆரவ் அவன் கை தட்டி விட்டு ஒழுங்கா போடா என்று சொல்லிட்டு அவனை விட்டு நடந்து மற்றொரு சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 மறுபடியும் அவன் அருகில் வந்த ஹர்ஷித் அண்ணா லா ஏன் செல்லம் லா என்று ஆரவ்வே கொஞ்ச ஆரவ் இரு அந்த டெவில் கிட்ட சொல்லுறேன் என்று அவன் போன்னை எடுத்து கால் பண்ண போக அதை பார்த்து அதிரிந்த ஹர்ஷித் டேய் அண்ணா உனக்கு நான் என்ன டா பாவம் பண்ண..

போயும் போயும் யாரு கிட்ட என்ன கோர்த்து விட பாக்குற உனக்குலா மனசுன்னு ஒன்னு இருக்க இல்லையே என்று அவனை 😡முறைந்தான்.

 அவன் சொன்ன விதத்தில் சிரித்த ஆரவ் தெறித்துல அப்போ ஒழுங்கா இருடா இல்ல உங்க அண்ணா கிட்ட போட்டு குடுத்துருவேன் என்று ஹர்ஷத்தை மிரட்டினான்.

 ஹர்ஷித் நான் போறான் போடா அண்ணா என்று சொல்லி விற்று அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் போவதையே சிறுசிறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கு வேலை செய்யும் பெண்ணை அழைத்து ஹர்ஷித் சாப்பிட்டானா என்று கேட்டான்.

 அதற்கு அந்த பெண்மணி சாப்டாங்க சார் என்று சொல்லா ஆரவ் சரி நீங்க போய் வேலையை பாருங்க என்று அனுப்பி வைத்து விட்டான்..

ஆரவ் மனதில் ஹர்ஷித் நீயும் அவனும் ரொம்ப கஷ்ட பட்டிங்க டா இன்னமேவாது எப்போதும் சிரிச்சிட்டே இருக்கானு என்று மனசுக்குள் கடவுளே வேண்டி கொண்டான்…

ஹர்ஷத் அவன் அறைக்கு போகவும் ஆரவ் சோபாவில் அமர்ந்தவனுக்கு அப்போதுதான் ஒன்னு நியாபகம் வந்தது..

ஆமா எதுக்கு அந்த டெவில் அவனை கொள்ள சொன்னனு தெரியாலே நம்மளும் அவனை கொள்ள சொல்லிட்டமே என்று புலம்பியவன் ஆமா இப்போ நமக்கு எதுக்கு புலம்புறோம் பேசாம அவனுக்கே போன் பண்ணி கேற்றுவோமே என்று நினைந்தவன் அவன் போன்னே எடுத்து டெவில் க்கு கால் செய்தான்.

அவன் போன்னே எடுக்க வில்லை ஆரவ் மனதிற்கு அவன் போன் பண்ணி நான் எடுக்கனால எவளோ திட்டுவான் ஆனா நம்ம பண்ண மட்டும் எடுக்க மாட்ட அந்த டெவில் என்று ஆரவ் புலம்பி கொண்டு இருந்தான்..

அந்த நேரம் பார்த்து ஹர்ஷித் ரூம் கதவை திறக்க ஆரவ் தனியா புலம்புவதை பார்த்த ஹர்ஷித் இந்த ஆரவ் அண்ணாக்கு என்ன ஆச்சு அயோ பைத்தியம் புடிச்சிருச்சா போல என்று நினைத்தவன் மறுபடியும் அவன் அறைக்குள் சென்று விட்டான்..

அப்போது அந்த வீட்டின் வாசலில் ஓரு விலை உயர்ந்து கார் ஒன்று வந்து நின்றது…

சோபாவில் இருந்த ஆரவ் தலையை மட்டும் திருப்பி பார்த்தான்…

அங்கு வரும் நபரை பார்த்த ஆரவ் இவன என்று நினைத்து கொண்டு மறுபடியும் திரும்பி விட்டான்…..

வீட்டில்க்குள் வந்தவன் டேய் மச்சான் என்னடா பாத்துட்டு திரும்பிட்டா என்று கேட்டான்…

 அவனை பார்த்த ஆரவ் பேசமா இரு டா நானே கடுப்புல இருக்கன் டா என்று சொன்னான்.

வந்தவனோ ஏன் டா என்ன ஆச்சு என்று கேட்டான்…

அவன் அப்படி கேட்கவும் ஆரவ் அதை ஏன் டா கேக்குற என்று சொல்லிவிட்டு அந்த காட்டுக்குள் நடந்ததை சொன்னான்…..

அவன் சொல்லுவதை எல்லாம் கேட்ட அந்த புதியவன் ஒஹ்ஹஹ் இது தானா நான் கூட வேற எதோ பிரச்சனை நினைச்சன் டா என்று சொன்னான்..

அவன் எப்படி கேட்கவும் ஆரவ் டேய் அப்போ அந்த டெவில் ஏன் கொள்ள சொன்னான்னு உனக்கும் தெரியுமா டா என்று கேட்டான்..

அவனோ எனக்கு மட்டும் மட்டும் இங்க உள்ள எல்லாருக்கும் தெரியும் டா என்று சொல்லிட்டு மாடி படி ஏறி அவன் அறைக்கு சென்று விட்டான்…

ஆரவ் தான் கடும் கோவத்தில் அவன் போனா அறையை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்.. 

(ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் டேய் ஒழுங்கா இவனுங்க இன்ட்ரோ கொடுத்துட்டு அப்பறம் கதை குள்ள போங்கடா 😂)

சரி வாங்க இவங்க யாருனு நம்ம பாப்போம் அதுக்கு முன்னாடி ஆரவ் கிட்ட பேசிட்டு மேல போனானே…

அவன் பெயர் மாறன்

அதுக்கு அப்புறம் இன்னும் 2ண்டு பேரு வீட்டுக்குள்ள வராங்க அவங்களையும் பாத்துட்டு மொத்தமா இன்ட்ரோ கொடுக்குறேன் கைஸ்…

மாறன் போன அடுத்த நிமிடம் மறுபடியும் அந்த வீட்டு வாசலில் இரு கார்கள் வந்து நின்றது..

ஆரவ் மறுபடியும் திரும்பி பார்த்தான் அங்கு வந்துவர்களே பார்த்து இவனுங்களும் வந்துட்டாங்களா..

 முதலில் ஆரவ் அருகில் வந்தவன் ஆத்விக் என்ன டா மை டியர் பிரதர் தனியா இருக்க என்று கேட்டான்…

அதுக்கு ஆரவ் எல்லாம் ஏன் தலை எழுத்து டா என்று புலம்பா அதை கேட்ட ஆத்விக் உடனே பாசமாகா கேட்பது போல என்ன டா அந்த டெவில் தான் காரணமா என்று கேட்டான்..

ஆரவ் ஆமா டா அவன் ஏன் அவனை கொள்ள சொன்னன்னு எனக்கு இன்ன வர தெரில டா என்று புலம்பினான் அதற்க்கு ஆத்விக்கோ டேய் இன்னுமா உனக்கு தெரியலா என்று கேட்டான்..

ஆரவ் அவனே முறைத்து பார்த்து தெரில தான் கேக்கறேன் என்று பல்லை கடித்தான்…

ஆத்விக் அதற்க்கு சிரித்து விட்டு டேய் அவன் நமக்கு எதிரா ஆப்போசீட் கம்பெனிக்கு நம்ம டேன்டர் பைல்ஸ் எல்லாம் திருடி கொடுத்திருக்கான்டா அதனாலதான் அவனுக்கு அந்த தண்டனை அவன் அந்த டெவில் கிட்டயே வச்சிக்கிட்டான் டா அதுனாலதான் அவனுக்கு அந்த தண்டனை அதும் மரண தண்டனை என்று சொன்னான்..

பின்பு ஆரவ்வே பார்த்து நீ இன்னும் வளரனும் டா தம்பி என்று சொல்லி சிரிச்சித்து கொண்டே அவன் அறைக்குள் ஓடி விட்டான்…..

ஆரவ் மனதில் என்ன டா அவன் கலாய்ச்சிட்டு போறான் இவன் இப்படி சிரிச்சி கடுப்பேத்திட்டு போறான் என்ன பார்த்தா எப்படி டா தெரிது என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு திரும்பும் போதுதான் பின்னால் நின்று இருந்த **யாஷிவந்த்தை (யாஷ் )**பார்த்தான்…

 இவன் பேஸ் ஏன் இப்படி இருக்கு ஓரு வேல அந்த டெவில் திட்டிருப்பானோ,அதுக்கு தான் வாய்ப்பு இல்லையே டெவிலும் யாஷ் பேசி பல வருஷம் ஆச்சே அப்பறம் ஏன் இவன் இப்படி இருக்கான் என்று யோசனையோடு மச்சான் ஏன் டா ஆச்சு என்று கேட்ட அதற்க்கு யாஷ் என்னலா முடிலடா என்று சொல்லி அழுக அரமித்து விட்டான் ஆரவ்க்கு ஒன்னும் புரியவில்லை…

மச்சான் என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகுற ப்ளீஸ் டா என்ன னு சொல்லு டா என்று கேக்க அதற்கு அழுதான்…. யாஷ் அம்மு பாப்பா நியாபகம் வந்துருச்சி டா என்று சொல்லி அழுதான்….

அப்போதுதான் ஆரவ்விற்க்கு நியாபகம் வந்தது அம்மு பாப்பா பர்த்டே என்று மச்சான் ப்ளீஸ் டா அழாத டா அம்மு இருந்த நீ அழுகுற பார்த்து பீல் பண்ணு வாடா ப்ளீஸ் பீல் பண்ணாத டா 🥺என்று ஆரவ் சொல்லி கொண்டு இருந்தான்..

 யாஷிவந்த் அழுகை சத்தம் கேட்டு மாறன் ஆத்விக் ஹர்ஷித் என அனைவரும் ஹைல்லிற்க்கு வந்து விட்டார்கள்…

ஆரவ்விடம் ஆத்விக் என்ன ஆச்சு என்று கேக்க ஆரவ் அம்மு பர்த்டே என்று சொல்லும்தான் அனைவரும்க்கும் நியாபகம் வந்தது…. 

ஆத்விக் விடு டா மச்சான் இப்படி பீல் பண்ணாத டா.

யாஷ்க்கு திடிர் என்று எதோ நியாபகம் வந்தவானகா சுற்றி முற்றி பார்த்தான்..

அவன் செய்கையை பார்த்தா மாறன் என்ன டா பாக்குற, அதற்கு யாஷ் அவன் எங்கடா என்று கேட்டான்…

அப்போது தான் அனைவருக்கும் அவன் நியாபகம் வந்தது..

யாஷ் உடனே அவனுக்கு கால் பண்ணு என்று ஹர்ஷித்திடன் சொன்னான்..

ஹர்ஷத் அவன் அண்ணா நம்பர்க்கு கால் செய்ய அது சுவிட்ச் ஆப் என்றே வந்துது அதை அவன் அனைவரிடமும் சொன்னான்..

யாஷ் கோவமாக ஏன் டா அவன் தனியா விட்டிங்க என்று திட்டி தீர்த்து விட்டான்.

  இவங்க எல்லாம் யாரு இவங்க சொல்ற அந்த டெவில் யாரு எல்லாத்தையும் நம்ம அடுத்த அத்தியாயத்தில பாக்கலாம் 

ஸ்டோரி எப்படி இருக்குன்னு படிச்சு பாத்துட்டு சொல்லுங்க டியர்ஸ் 💕

 அசுரனை ஆளும் தேவதை❤️

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.