அர்பிதா S | 08 Dec 2025 | Division: காதல் | Share
கொலை வழக்கு ஒன்றை விசாரிக்க கோவை வருகிறான் ஆர்யன்... அப்போதைய புலனாய்வு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் அவன் விசாரிக்கும் பாத்தாவது கேஸ் இது இயந்திரமாய் மாறி வாழும் அவன் முன் வந்து நிற்கிறாள் அனாமிகா.. இரண்டு வருடமாய் இறந்து போனதாய் நினைத்து வேதனையின் இருந்த ஆர்யன் அனாமிகாவை பார்த்ததும் மகிழ்கிறான்.. ஆனால் அனாமிகாவோ ஆர்யனை விட்டு விலகி நிற்கவே முயற்சிக்கிறாள்.. அதுவும் அனாமிகாவுடன் இருக்கும் மூன்று வயது பெண் குழந்தையை கண்டு மேலும் குழம்புகிறான் அர்யன் உயிருடன் இருந்தும் அவள் இத்தனை நாள் ஆர்யனை பிரிந்தது ஏன் குடும்ப சூழலில் சிக்கி கொண்டவள், தன் அண்ணனின் மர்மமான இறப்பு, அதன் பின் குடும்பத்தின் நிலை என அவள் கடந்து வந்த பாதை துன்பத்தை தந்து இருக்க, அண்ணன் இறந்த மர்மம் அறிவாளா அவள்? அனாமிகாவின் குழந்தை பற்றி உண்மை ஆர்யனுக்கு தெரிய வருமா? இவை அனைத்தும் தெரிந்து ஆர்யன் அனாமிகாவுடன் மீண்டும் வாழ ஆசை கொள்வானா அவன்?