பாகம் 2

Vaishnavi Vijayaraghavan | 18 May 2026 | Share

தித்திக்கும் தேன்பாவை 

பாகம் 2 

” என்னப்பா நீ, இதெல்லாம் சின்ன சின்ன விஷயம். எல்லா ஒய்ஃப்க்குமே அந்த ஆசை இருக்கும். தான் சமைச்சத தன்னோட கணவன் பாராட்ட மாட்டாரான்னு?. நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்றதுல உனக்கு என்ன குறைஞ்சிடுது? ” என்றார் ரங்கநாதன்.

” சரி சரிப்பா, கிளாஸ் எடுக்காது உன் தங்கச்சி கிட்ட இப்பவே சொல்லிடுறேன் போதுமா ?

சரி என்கிட்ட இவ்வளவு சொல்றியே, நீ கவுசல்யா கிட்ட சொல்லுவியா ? “

என்றார் சிவஞானம். 

” அவளோட காஃபி டீ தவிர அவ சமைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். சமையல்ல அவள மிஞ்சும் ஆளே கிடையாது. உன்னோட சமையலுக்கு நான் அடிமை டீன்னே அவகிட்ட சொல்லி இருக்கேன் “

” ஓ, இந்த வயசிலேயும் ரொமான்ஸ் கிங் தான் நீ ” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவஞானம்.

” பொண்டாட்டி கிட்ட ரொமான்ஸை காட்டுவதற்கு வயசு இருக்கா என்ன?”

“அது என்னவோ சரிதான் “

என்று இருவரும் பேசிக்கொண்டே மெதுவாக நடந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

ரங்கநாதனின் வீட்டில்,

வீட்டிற்கு சென்றதும் ரங்கநாதனின் மனைவி கௌசல்யா.

” என்னங்க இன்னைக்கு கூட வா வாக்கிங் போவீங்க” 

”  டாக்டர் தான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரே வாக்கிங் போயே ஆகணும்னு, நாளைக்கு போகாம இருக்கிறேனா பாரு? “

என்று சொல்லி சிரித்தார் ரங்கநாதன்.

” கிண்டல் எல்லாம் போதும், சரி காஃபி தரவா? “

” உன்னோட காஃபிய குடிக்க வேணாம்னு தான் கணேசன் கடையில் டீ குடிச்சிட்டு வந்துட்டேனே “

” இனிமேல் நீங்க கேட்டா கூட காஃபியை தர மாட்டேன் உங்களுக்கு, போங்க”

” கோச்சிக்காத கௌசி” என்று சொல்லி கௌசல்யாவின் தோளில் கையை போட்டார் ரங்கநாதன்.

” எத்தனை முறை சொல்கிறேன் கௌசி ன்னு கூப்பிடாதீங்க கௌசல்யா என்று முழு பெயர் வச்சு கூப்பிடுங்கள் என்று “

” என் பொண்டாட்டியை என் விருப்பப்படி தான் கூப்பிடுவேன் “

” நாளைக்கு நம்ம மருமக ஊர்மிளா வந்தா சிரிப்பா “

” அவளும் நம்ம பொண்ணு நந்தினி மாதிரி தானே, அவ ஏன் சிரிக்க போறா? அப்படியே சிரிச்சாலும் அதுக்காக நான் கவலைப்பட மாட்டேன் “

” நீங்க கவலைப்பட மாட்டீங்க, ஆனா எனக்கு வெக்கமா இருக்கு “

” இதுக்கு ஏண்டி வெக்கப் படுற?” என்ற சொல்லி தன் மனைவியை தன் பக்கமாக இழுத்து அணைத்தார் ரங்கநாதன்.

” வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்ல” என்று சொல்லி அவர் கையை தள்ளி விட்டுவிட்டு சோஃபாவில் இருந்து எழுந்து கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.

“அம்மா டிபன் ரெடியா? ” என்று கேட்டுக் கொண்டே குளித்துவிட்டு காலேஜுக்கு ரெடி ஆகி மாடியிலிருந்து இறங்கி வந்தாள் நந்தினி.

” லஞ்ச் ரெடி,  ஒரு ரெண்டு நிமிஷம் நீ போய் சாமி கும்பிட்டு விட்டு வா அதுக்குள்ள டிபன் எடுத்து டேபிளில் வைக்கிறேன்” என்றார் கௌசல்யா.

” என்ன காலங்காத்தால நீயும் உன் புருஷனும் ஒரே ரொமான்ஸ் போல ” என்று சொல்லி தன் அம்மாவின் கன்னங்களைக் கிள்ளினாள் நந்தினி.

” ஏய் பிச்சுப்புடுவேன் பிச்சு, ஓவரா பேசாத” என்று சிரித்துக் கொண்டே பொய் கோபம் கொண்டு நந்தினியின் தோளை தட்டினார் கௌசல்யா.

பூஜை ரூமுக்கு சென்று இரண்டு நிமிடம் சாமி ஸ்லோகம் சொல்லி கும்பிட்டு விட்டு தன் அப்பாவின் பக்கத்தில் வந்த அமர்ந்தாள் நந்தினி.

“அப்பா, குட் மார்னிங் “

” குட் மார்னிங் அம்மு”

“அப்பா, காலேஜ் டூருக்கு காசு கேட்டு இருந்தேனே? “

” அதான பார்த்தேன், என்னடா இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு குட்மார்னிங் எல்லாம் சொல்றாளே என் பொண்ணுன்னு”

” அப்பா அன்னைக்கு கூட நான் உங்களுக்கு சொன்னேன் இல்ல? “

” என்னைக்கு? போன வாரம் வியாழக்கிழமை தானே? “

” வியாழக்கிழமையா? “

” பாரு உனக்கு கிழமை கூட ஞாபகம் இல்லை “

” அப்பா” என்று கொஞ்சுவது போல பேசினாள் நந்தினி.

“சரி சரி இந்தா டூருக்கு “

” என்னப்பா கரெக்டா அமௌன்ட் தரீங்க? “

” டூருக்கு போற அன்னைக்கு கை செலவுக்கு தரேன் மா”

” அது இல்ல அப்பா, டூர் போறதுக்கு ட்ரெஸ்ஸும் கொஞ்சம் எடுத்துக்கிறேன் அப்பா “

” இப்ப தானடி பொங்களுக்கு, பர்த்டேக்குன்னு போன மாசம் நாலு செட் டிரெஸ் எடுத்த? “

அதுக்கு முன் மாசம் நியூ இயர் ன்னு இரண்டு டிரஸ் எடுத்த, போன வாரம் கூட உங்க அண்ணனுக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லி டிரஸ் எடுத்த, இன்னும் எதுக்கு உனக்கு டிரஸ்? ” 

என்றார் அம்மா கௌசல்யா.

” அம்மா தெரியாம பேசாதீங்க, அண்ணா நிச்சயதார்த்தத்துக்கு வாங்குனதெல்லாம் கிராண்ட் ஆனா டிரஸ், அதெல்லாம் போட்டுக்கிட்டு டூர் போக முடியுமா? பொங்கலுக்கு நீங்க என்ன வாங்கி கொடுத்தீங்க? ஒரு பாவாடை தாவணி ஒரு புடவை அதை போட்டு கிட்டு டூர் போக முடியுமா? அப்புறம் பர்த்டேக்கு ரெண்டு டிரஸ் தான் எடுத்தேன். நியூ இயருக்கு ஒன்னு அது ரெண்டு நாளைக்கு போடலாம் மீதி ரெண்டு நாளைக்கு டூர்ல நான் என்ன போடுறதாம்? “

” அந்த ரெண்டு ட்ரெஸ்ஸை தவிர வீட்ல உனக்கு வேற டிரஸ் இல்லையா மா? “

“அம்மா இது எனக்கும் டாடிக்கும், நீங்க இதுல உள்ள வராதீங்க “

” பதில் சொல்ல முடியல, அதனால இப்படி சொல்றியா? “

” கௌசி, நானும் அவளும் தான் பேசிகிட்டு இருக்கோம் இல்ல ” என்றார் ரங்கநாதன்.

” மிச்” என்று சொல்லி தன் கணவனை முறைத்தார் கௌசல்யா.

” சரி கௌசல்யா, கௌசி சொல்லல போதுமா? “

“அப்பா ஆகட்டும் பெண்ணாகட்டும்”  என்று சொல்லி அங்கிருந்து கிச்சனுக்கு சென்றார் கௌசல்யா.

” இந்தமா என்று சொல்லி 2000 ரூபாயை கொடுத்தார் “

” தேங்க்ஸ் அப்பா” என்று சொல்லி அவரை ஹக் செய்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு

” பை” என்று சொல்லிக் கிளம்பினாள்.

” டிபன் சாப்பிடாமல், லஞ்ச் எடுத்து கொள்ளாமல் நீ காலேஜூக்கு போனா உங்க அம்மா இன்னும் கடுப்பாயிடுவா “

” ஐயோ அப்பா, நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க.” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் நந்தினி.

தன் மகளைப் பார்த்ததும் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டார் கௌசல்யா.

பிறகு போய் தன் அம்மாவை கட்டிப்பிடித்து,

” அம்மா சாரிமா, ஏன் எல்லாத்துக்கும் என்கிட்ட கோச்சுக்கிறீங்க? “

” நானா கோச்சுக்கறேன், நீங்க ரெண்டு பேரும் தான் என்னை திட்டுறீங்க “

” டூருக்கு எல்லாரும் புது டிரஸ் போட்டு வருவாங்கமா, நான் மட்டும் பழைய டிரஸ்ல போனா எல்லாம் கிண்டல் பண்ணியே சாகடிப்பாங்க “

” சரி சரி அதான் ஏதோ ஒரு காரணம் சொல்லி உங்க அப்பா கிட்ட இருந்து காசு வாங்கிகிட்ட இல்ல, எப்படியாவது நீ நினைச்சது தான் நடக்கணும். அப்படித்தானே? போய் டிரஸ் வாங்கிக்கோ. எனக்கு என்ன? “

” அப்படி எல்லாம் இல்லம்மா. என்றைக்குமா நான் ஷாப்பிங் உங்கள விட்டுட்டு போயிருக்கேன்.”

” அதுக்கு மட்டும் நான் வேணுமா “

” உண்மைய சொல்லணும்னா, நான் எனக்கு செலக்ட் பண்ற ட்ரெஸ்ஸ விட நீங்க எனக்கு செலக்ட் பண்ற டிரஸ் தான் சூப்பரா இருக்கு”

” இப்படி சொன்னா நான் உடனே ஓகே சொல்லிட்டு உன் கூட ஷாப்பிங் பண்ண வந்துருவேன் என்று நினைக்கிறாயா? “

” நான் ஐஸ் எல்லாம் வைக்கல உண்மையா தான் சொல்றேன். நீங்க வந்து தான் ஆகணும், அண்ணாவோட நிச்சயதார்த்தம் நாளைக்கு முடியட்டும். அடுத்த வீகெண்டுல போய் வாங்கலாம் “

பதில் பேசாமல் அமைதியாக இருந்தார் கௌசல்யா.

” என்னமா இன்னும் கோபமா தான் இருக்கீங்களா? “

” சரி சரி அதை விடு, இந்தா லஞ்ச். டிபன் தரேன் இரு.”

” அம்மா என் செல்லம்மா இல்ல? “

” என்ன இன்னைக்கும் டிபன் வேணாம்னு சொல்ல போற அதானே? “

” என்ன பத்தி நல்லா புரிஞ்சு வச்சிக்கிறதுக்கு உங்கள விட்டா வீட்ல ஆளே இல்லமா”

” போதும் போதும், இந்தா இந்த பால குடிச்சிட்டு இந்த பழத்தை சாப்பிட்டுக்கிட்டே போ” என்று சொல்லி இரண்டு வாழைப்பழத்தை கொடுத்தார் கௌசல்யா.

” தேங்க்ஸ் அம்மா, பை” என்ற சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு வாழைப்பழத்தையும் அந்த லஞ்ச் பேக் இன் உள்ளே வைத்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி.

“பை நந்து” என்று ஸ்மைல் செய்தபடி சொன்னார் கௌசல்யா.

நந்தினி கிளம்பியதும் ஹாலில் அமர்ந்திருக்கும் தன் கணவனுக்கு ஒரு தட்டில் டிபன் எடுத்து வந்து அவர் முன்னே வைத்துவிட்டு பதில் பேசாமல் சென்றார் கௌசல்யா.

“கௌசி ” என்று கூப்பிட்டார் ரங்கநாதன்.

திரும்பிப் பார்த்து வாயை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுழித்து ஒழுங்கு காட்டினார் கௌசல்யா.

சிரித்தபடி எழுந்து அவர் பக்கத்தில் சென்றார் ரங்கநாதன்.

தொடரும்….

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.