இறுதிவரை உன்னோடு
இதயம் தொலைத்து தொலைதூரம் பயணத்திட ஆசை கொண்டேன் … கரம் பற்றி காதலோடு களித்திருந்த காலம் எல்லாம் கனவாய் போனது … கண் நிரம்பி வழியும் கண்ணீரெல்லாம் காதலை கரைத்திட முடியாமல் கனத்த இதயத்துடன் காலத்தை நகர்த்திடும் படி ஆனது … இருந்தாலும் இறந்ததாலும் உன் கரம்பற்றி இருந்து விடவே கனவு கொண்டேன் … நின் நினைவுகள் இல்லாது போனாலே மரணம் கொள்ளும் மனம் கொண்ட நான் , நீயில்லாது போனால் எப்படி உயிர் கொள்வேன் ……