Author: Kavi_nizha18

பிரிவு

உனக்கென நானும்  எனக்கென நீயும்  தவித்திருந்த காலங்கள்  மாறி இருக்கலாம்…!  பார்வைகள் நம்மை  ரசிக்க வைத்த காலங்கள்  மாறி இருக்கலாம்..! நம் தேடல்களின்  காத்திருப்பு காலங்கள் குறைந்திருக்கலாம்…!  ஏனோ இன்னும்  நமக்குள் இருக்கும்  காதல் மட்டும்  குறையவில்லை..!  கானல் நீரின்  சாரலில் நனைந்த  உணர்வு போல்  பிரிவுநிலை கடந்து  விட்ட பிறகும்…! -கவி நிலா 

கரைந்து போகிறேன்

மாலை நேரம் என்  ஜன்னலின் ஓரம்  சாரல் மழையில்  நனைகிறேன்…!  பார்க்கும் தூரம்  நீ இருந்தாலும்  என்னை நீ  எதிர்பார்க்க வேண்டும்  என்றே மறைக்கிறேன்…!  நீயும் நானும்  சாலையோரம் சேர்ந்தே  நடக்கும் தூரம்  குறையாமல் இருக்க நினைக்கின்றேன்…!  வானில் போகும்  மேகம் ஒன்றாய்  சேர்ந்து கருமேகம்  ஆகும் நேரம்  நான் தனிமையில்  தவிக்கிறேன்…! -கவி நிலா…!

Contact Us

error: Content is protected !!