கள்ளச்சாராயம் இழப்பு
பெண்கள் வலி..!
அடேய் நான் வீடுவீடாக சென்று பாத்திரம் ,
கழுவிய பாத்திரம் இன்னும் காயவில்லையே ,
முந்தானை முடிச்சில் கட்டியா பத்து ரூபாயை மார்போடு அத்து போரானே ,
தாலாட்டி தூங்க வைக்க என் புள்ள என்ன சிறு புள்ளையா
வளர்ந்து வயது வந்துருச்சு ,
இரத்தம் இன்னும் நிக்கல டா ,
துணி வாங்க இன்னும் நாலு வீடு ஏரனும்மே ,
காசு கொஞ்சம் கொடுத்து போயா
உன் சோகத்துக்கு நான் படுத்து தொலைகிறேன் ,
உன் சாராய போதைக்கு நான் வத்தலு ஆகுறேன் ,
என் பிள்ளைக்கு காக்கஞ்சி வாங்க
காசு கொஞ்சம் கொடுத்து போயா ,
நா பெத்த கடைசி பையன் பெஞ்சு குட்சி வாங்க எட்டணாவது கொடுத்து போயா ,
சர்க்கார் சார் நீங்க வளர்ந்து பெரியாலு ஆகி போனீங்க ,
என் பிள்ளையை வளர்க்க நாதி கெட்டு நடு வீதி வந்தேனே ,
என்ன செஞ்சு நான் தொலைச்ச .!
என்ன செஞ்சு நான் தொலைச்ச .!
என்ன செஞ்சுட்டு போச்சு .!
என்ன செஞ்சுட்டு போச்சு. !
தினமும் சாராயம் குடுட்ச்சு வந்து வைருக்கு கீழ பொத்தலா வீங்கிருச்சு ,
மாமன் தான்னு நான் பொறுத்து போனேன் ,!
மாமன் தான்னு நான் பொறுத்து போனேன் ,!
மாமா என்ன கொஞ்சம் பாருயா ,
உன் சோம்பல் முறிக்க சாராயக் கடைக்கு போனா ,
என் சோம்பல் முறிக்க நான் அங்கேயே கிடக்கனும் ஐயா ,
உன் சோம்பல் முறிக்க சாராயக் கடைக்கு போனா ,
என் சோம்பல் முறிக்க நான் அங்கேயே கிடக்கனும் ஐயா ,
போனால் போதும் பொறுத்துப்போன தெருவோரம் நாயோ உன் மேல் மூத்திரம் போகுதய்யா ,
நான் வழுட்சு போட்டு உன்ன நான் தூக்கி வாந்தா ,
பக்கத்து வீட்டு காரணுக
நா நடத்த கெட்டு போனெண்ணு சொல்லி கேலி கிண்டல் செய்றாங்க ,
மாமா நீ குடிச்சு செத்து போன ஊரு காரணுக பேசுற பேச்சுல நானும் கூடவே வந்துறுவே ,
என் பிள்ளைகள் என்ன பாவம் செஞ்சு நம்ம செஞ்ச பாவதுல .
கு.கிருஷ்ணன்
பழனி
9585152416