வனங்கள் அழித்து
வளங்கள் பெற்றோம்
நிலங்கள் அழித்து
நிம்மதி இழந்தோம்
மரங்கள் அழித்து
மழையைக் குறைத்தோம்
தொழில்நுட்பம் பெருக்கி
தொல்லைக்கு ஆளாகினோம்
தென்னை அழித்துத் தென்றல்
தொலைத்தோம்
இயற்கை மரித்துச் செயற்கை பிறந்ததால்
இன்பங்கள் மறைந்தன
துன்பங்கள் பிறந்தன
காற்றை கடன்வாங்கும்
கலியுக வாழ்க்கையில்
கண்ணீருக்குக் கூட
தண்ணீர் இல்லை
இன்னும் விழித்தெழவில்லை
எனில் இயந்திர விடியலில்
இதயம் துடிக்கும்
- #சரவிபி ரோசிசந்திரா
4 comments