இறுதிவரை உன்னோடு

0
(0)

இதயம் தொலைத்து

தொலைதூரம் பயணத்திட

ஆசை கொண்டேன் …

கரம் பற்றி காதலோடு

களித்திருந்த காலம்

எல்லாம் கனவாய் போனது …

கண் நிரம்பி வழியும்

கண்ணீரெல்லாம் காதலை

கரைத்திட முடியாமல்

கனத்த இதயத்துடன் காலத்தை

நகர்த்திடும் படி ஆனது …

இருந்தாலும் இறந்ததாலும்

உன் கரம்பற்றி இருந்து விடவே

கனவு கொண்டேன் …

நின் நினைவுகள் இல்லாது

போனாலே மரணம் கொள்ளும்

மனம் கொண்ட நான் , நீயில்லாது

போனால் எப்படி உயிர் கொள்வேன் …

நீயில்லாத நாட்கள் எல்லாம்

நிசப்தத்துடன் நீளமாய் தொடர்கிறது

நீங்கியதின் காரணம் தெரியாமலே …

உன்னோடு இல்லாது போனாலும்

உன் நினைவுகள் உள்ளம் நிறைந்து

உயிர் தாங்கி உடல் கொண்டு

வாழ்கிறது …

இறுதிவரை உன்னோடு வாழ

ஆசை கொண்டேன் , ஆசை அது

நிராசை ஆனாலும் உன் நினைவுகளுடன்

வாழும் வாழ்க்கையது உன்னை

இன்றும் என்னோடுதான் வைத்திருக்கிறது

விட்டு விலகாமல் …

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் – மகோ
+91-98438-12650
கோவை-35

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

2 comments

    • Maheswaran Govindan - Reply

      Thanks for what?. i dont understand the comment. anyway thanks for the comment.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!